Tuesday, April 8, 2008

காதல்...!

காதல் என்றால்
க ஆதல்
ஒன்றைக் குறிப்பதால்
காதல் என்றால்
ஒன்றாதல்
ஒருமை.
காதல் என்னும் ஒருமையே
உன் இருதய நியதி
உன் உயிர் நிலை!

எனவே தான் பாரதி
காதல் போயின் சாதல்
என்றானோ!
காதலி போயின் சாதல்
என்றோ
காதலன் போயின் சாதல்
என்றோ
பாரதி சொல்லவில்லை.
காதலிகளும் காதலன்களும்
இருதய நியதியில்
உயிர் நிலையில்
அடங்கும் மெய்களே!
எனவே தான்
நீயும்
காதலைக் காதலியுங்கள்
என்றாயோ!
யோசி தங்காய்!
ஆழ்ந்து யோசி!
காதலைத் தியானம் செய்
மௌனத்தில்!
என்புதோல் போர்த்த மெய்யுடம்பில்
உயிராய் உறையும்
காதல் எனும் ஒருமையை
தியானம் செய்!
காதல் போயின் சாதல்
என்ற மகாகவி பாரதியின் வாக்கை
தியானம் செய்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "காதல்...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: