Tuesday, April 8, 2008

விலை பேச முடியா உண்மை

என் உள் மையாம்
உயிர்மையே!
என் உள் மெய்யாம்
உயிர்மெய்யே!
நான் நனி விரும்பி
உண் மை
உண்மையே!
உன் மை உண்டு
உன் மெய் உணர்ந்த
நான் உறுதியாய்ச் சொல்லுகின்றேன்
உனக்கு விலை சொல்ல முடியாது
எச்சந்தையிலும்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உண்மையே உந்தன் விலை என்ன?" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: